Friday, December 13, 2013

CHARACTER SET

To learn any language, first one must know the alphabets of the language and they are known as character set in general. 

There are 50 different characters in COBOL character set. +

They are listed below. 


  1. 0-9 (10 numerals) 
  2. A-Z (26 English alphabets-only capital letters) 
  3. – (minus sign or hyphen) 
  4. + (Plus sign) 
  5. * (Asterisk) 
  6. / (Slash) 
  7. 0= (Equal sign) 
  8. $ (Currency sign) 
  9. , (Comma) 
  10. ; (Semi colon) 
  11. . (Period or decimal point) 
  12. “ (Quotation mark) 
  13. ( (Left Parenthesis ) 
  14. ) (Right Parenthesis) 
  15. > (Greater than symbol) 
  16. < (Less than symbol)
  17. The characters 0-9 are called numeric characters or digits. 
  18. The characters A-Z are called letters and the remaining characters are called special characters. 
  19. The space or blank character in certain cases is treated as a letter. 



                           
STRUCTURE OF A COBOL PROGRAM 

COBOL program must have the following 4 divisions in the order in which they are given below;- 
1. Identification division 
2. Environment Division 
3. Data Division 
4. Procedure Division

In the Identification division the details about the author, date of writing the program etc will be specified. 

In the Environment division, the details about the computer environment under which the program was written and compiled etc will be notified. 

In the Data division, the variables that are used by the program will be defined and it is an important division for the program. 

all the programming statements (Executable COBOL statements) will be written and it is the most important division. 

Their purpose will be to allocate memory space for the variables and to notify the files that are to be used with the program. 


A statement of a COBOL program can be written in one or more coding lines.


                                           COBOL PROGRAMMING
1) Introduction Cobol


  • In 1959, the new language named COBOL (COmmon Business Oriented Language) was introduced keeping in mind the business purpose applications. 
  • The first COBOL compiler became available in early 1962. 
  • The next version with some new additions was published in 1965. 
  • In August 1968 a standard version of the language was approved by the American National Standard Institute (ANSI). 
  • This standard version was again modified in 1974 and is known as ANSI-74 COBOL or COBOL -74. 
  • The revision process has been continuous and in 1985 a revised standard was introduced. This standard was known as COBOL-85.



2) FORMAT FOR COBOL PROGRAMS 
  • COBOL is a high-level language. 
  • Hence, a COBOL program can be executed on a computer for which a COBOL compiler is available.
  • The compiler translates a COBOL source program into the machine language object program. 
  • This object program is really executed. 
  • COBOL programs are written in coding sheets. 
  • There are 80 columns in a line of the coding sheet. 
  • The page number is coded in columns 1-3 and the line numbers are coded in columns 4-6. 
  • The page and line numbers together is called the sequence number. 
  • Depending on the type, the entries are coded both from column 8 or column 12 and in both cases it can be continued up to column 72. 
  • Columns 73-80 can be used to write some identification. 
  • The compiler ignores anything that is given in columns 73-80 except when a printed copy of the program is provided by the compiler in which case the entries in columns 73-80 are also listed. 
  • The use of the sequence number is also optional and can be omitted. 
  • However, when sequence numbers are provided they must appear in ascending order. 

  • In COBOL there are two types of entries known as margin A and margin B entries. 
  • Margin A entries start from column 8, 9, 10 or 11 and margin B entries start from column 12 or anywhere after 12. 
  • An asterisk (*) in column 7 indicates a comment line and the entry is not compiled to produce object code. 
  • Comment lines are actually some notes revealing the intentions of the programmer. 
  • Since the compiler ignores them, anything can be included as comments. 
  • Comment lines can appear anywhere after the first line of the COBOL program. 
  • A comment line can also be indicated by using the character slash ( / ) in column 7. 
  • But in this case the comment line will be printed after causing a page ejection (i.e., after skipping to the top of the next page). 






Sunday, December 1, 2013

வெற்றி ஆண்களுக்கு மட்டுமல்ல - சாதித்துக் காட்டிய ஸ்ரீவித்யா பிரியா


என்னதான் பெண்கள் எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு இணையாகப் பணிபுரிந்தாலும் சில துறைகளை ஆண்களுக்கென்றே நேர்ந்துவிட்டதுபோல இருக்கும். 

சுற்றி ஆண்கள் மட்டுமே நிறைந்திருக்க, பெண்கள் அங்கே பார்வையாளர்களாகக்கூட இடம்பெற முடியாது. ‘லாஜிஸ்டிக்ஸ்’ எனப்படும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் சார்ந்த துறையும் ஆண்களால் மட்டுமே அரசாளப்படுவதுதான். 

ஆனால் அதில் தனித்துக் களமிறங்கி, சாதித்தும் காட்டியிருக்கிறார் வித்யா என்கிற ஸ்ரீவித்யா பிரியா.
“எதுல இருந்து ஆரம்பிக்கட்டும்? கொஞ்சம் வித்தியாசமா என் கல்யாணத்துல இருந்து தொடங்கட்டுமா?” - கலகலப்புடன் கேட்கிறார் வித்யா. சென்னை, பாரீஸில் இருக்கும் அவருடைய அலுவலகத்தில் பரபரப்புகளுக்கு நடுவில் எதையுமே பொறுமையுடன்தான் அணுகுகிறார். குறுக்கீடுகளைக்கூட இன்முகத்துடன் எதிர்கொள்கிறார். சென்னை வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் கவர்னர் கையால் வாங்கிய விருதுகள் மேஜைக்குப் பின்னால் இருக்க, தன் முன்னால் இருக்கும் சவால்கள் குறித்துப் பேசுகிறார் வித்யா.
“எங்களோடது பெற்றோர் சம்மதிக்காத காதல் திருமணம். என் கணவர் பாலச்சந்திரன், டிரான்ஸ்போர்ட் பிசினஸ்ல இருக்கார். அவர் வீட்ல சம்மதம் கிடைச்சாலும், என் வீட்டில் ஏத்துக்கவே இல்லை. நாங்க பரம்பரை பணக்காரர்கள் கிடையாது. கணவரோட வருமானம் போதவில்லை. காலேஜ்ல நான் படிச்ச பொருளாதாரமும், வாங்கின கோல்டு மெடலும் வாழ்க்கையில எந்த மாற்றத்தையும் பண்ணலை. படிச்சதுக்குக் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த ஷிப்பிங் கம்பெனியில வேலைக்குப் போனேன். பெரிய பதவி எல்லாம் இல்லை. சாதாரண வேலைதான். கொடுத்த வேலையை, நிறைவா செய்தேன். மூத்த மகன் பிறந்தான். அவனைப் பார்த்தாலாவது எங்க வீட்டோட கோபம் தீரும்னு என் பிறந்த வீட்டுக்குப் போனேன். கைக்குழந்தையோட வாசல்ல நின்ன என்னைப் பார்த்து, ‘நாங்க இன்னும் இருக்கோமா, செத்துட்டோமான்னு பார்க்க வந்தியா’ன்னு கேட்டாங்க. ஏற்கனவே உடைஞ்சு போயிருந்த என்னை மொத்தமா நொறுக்கிப்போட அந்த வார்த்தைகளே போதுமானதா இருந்தது. சரி, எல்லாத்துக்கும் இன்னொரு பக்கம் இருக்கும் இல்லையா? அவங்க நிலையில நின்னுப் பார்த்தா அவங்க அப்படி நடந்துக்கறதும் சரிதானே” என்று பெற்றவர்களை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் வித்யா.
வீட்டின் வறுமையை எப்பாடுபட்டாவது சமாளித்தாக வேண்டும் என்ற உத்வேகம்தான் அவரை ஒரு நிறுவனத்தின் முதலாளியாக உயர வைத்திருக்கிறது.
“ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட வீட்டுல 400 ரூபாய் வாடகைக்குக் குடியிருந்தோம். வீட்டுச் செலவு, குழந்தைங்க படிப்புன்னு செலவு மட்டும் அதிகமா இருக்கும். வரவுக்கு எங்கே போறது? என் கணவர் வேலை பார்த்த நிறுவனம் நஷ்டத்துல இயங்கினதால அதை மூடிட்டாங்க. என்ன செய்யறதுன்னே தெரியலை.
“நான் செய்துகிட்டு இருந்த வேலையை விட்டுட்டு சொந்தமா தொழில் தொடங்கலாம்னு முடிவு செய்தேன். என்னோட வேலை பார்த்த நாலு பேர், பங்குதாரர்களா சேர்ந்தாங்க. முதல் போட என்கிட்டே பணம் இல்லாததால ஆரம்பத்துல நான் வொர்க்கிங் பார்ட்னராதான் சேர்ந்தேன். எங்களுக்குத் தெரிஞ்சது லாஜிஸ்டிக்ஸ்தானே. அந்தத் தொழிலையே தொடங்கினோம். தொழில் இடத்துல பிரச்சினைகள் சகஜம்தானே. அதனால பங்குதாரர்கள் விலகிட்டாங்க. நானும் இன்னொருத்தரும் மட்டும் தொழிலைத் தொடர்ந்து நடத்தினோம். கடைசியில அவங்களும் விலகிட, நான் தனியாளா நின்னேன்” என்று சொல்கிற வித்யாவுக்கு அதற்கடுத்து ஏறுமுகம்தான்.
சவால்களைச் சமாளித்தேன்
“கப்பல், விமானம் போன்றவற்றில் வரும் சரக்குகளை உரியவரிடம் சேர்ப்பதுதான் எங்கள் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் வேலை. பொதுவா பரம்பரையா இந்தத் துறையில இருக்கறவங்கதான் இங்கே அதிகம். அவங்களுக்குத்தான் நிறைய வாடிக்கையாளர்கள் இருப்பாங்க. ஏன்னா அதிகமான பணம் புழங்கற, அதே சமயம் ரிஸ்க் நிறைந்த தொழிலும்கூட. நான் என்னோட கம்பெனிக்கு ஆர்டர் பிடிக்க எத்தனையோ கம்பெனிகள் ஏறி, இறங்கியிருக்கேன். என்னை நம்பி ஆர்டர் தர பலர் யோசிச்சாங்க. ஆனா சிலர் வாய்ப்பு தரவும் செய்தாங்க. அதைத் தடுக்க எத்தனை போட்டி தெரியுமா? நிறைய இடையூறுகள், தொந்தரவுகள். சமயங்கள்ல முக்கியமான டாக்குமெண்ட்ஸ் காணாமல் போயிடும்.
ஆண்கள் மட்டுமே நிலைச்சிருக்கும் இந்தத் துறையில என்னோட வரவை அத்தனை சீக்கிரம் யாருமே ஏத்துக்கலை. சிலர் என்னோட நடத்தையைக்கூட கேள்விக்குள்ளாக்கினாங்க. நான் உடைஞ்சுபோய் இந்தத் துறையில இருந்து விலகணும்கறதுதான் அவங்க நோக்கம். அப்படி நான் பின்வாங்கிட்டா, அவங்க ஜெயிச்சா மாதிரி ஆகிடுமே. எதைப் பத்தியுமே கவலைப்படாம என் கொள்கையில உறுதியா நின்னேன். இப்போ ஐ.டி.சி. மாதிரியான பெரிய பெரிய நிறுவனங்கள் என் வாடிக்கையாளரா இருக்கறது எனக்குப் பெருமையா இருக்கு” என்று சொல்லும்போதும் அவரது வார்த்தைகளிலோ, முகத்திலோ பெருமிதத்தின் சுவடு துளிக்கூட இல்லை.
வெற்றி ரகசியம்
“கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு மேல இருக்கற எங்கள் துறையில் நான் மூன்றாவது இடத்துல இருக்கறதா சேம்பர் ஆஃப் காமர்ஸ்ல இருந்து போன் வந்தப்போ நான் நம்பவே இல்லை. பரிசு வாங்கின அந்த நொடி எனக்கு இன்னும் சாதிக்கணும்கற உத்வேகத்தைக் கொடுத்துச்சு. குரூப் போட்டோவுக்கு நின்னப்போ அந்த குழுவில் நான் மட்டும்தான் பெண் என்பது தெரிஞ்சது. அது என் தன்னம்பிக்கையை அதிகரிச்சது. இப்போ ‘வீ வின் லாஜிஸ்டிக்ஸ்’னு இன்னொரு கம்பெனி துவங்கியிருக்கோம். நானும் என் பணியாளர்களும் அதுக்கான வேலைகளில் மும்மரமா இருக்கோம். காரணம் அவங்க பங்களிப்பு இல்லாம இந்த வெற்றி சாத்தியம் இல்லை” என்று தன் ஊழியர்களை உயர்த்திப் பேசுகிறார் வித்யா. தோல்வியில் துவளாத, வெற்றியில் துள்ளாத இந்த மனநிலைதான் வித்யாவின் வெற்றி ரகசியம்!

விசாகா நெறிமுறைகள் என்றால் என்ன?

பாலியல் தொல்லைகள் தொடர்பான சர்ச்சைகள் வெடிக்கும் போதெல்லாம் அடிக்கடி குறிப்பிடப்படும் விஷயம் விசாகா நெறிமுறைகள். 

இப்படி எல்லா சர்ச்சைகளிலும் எடுத்துக்காட்டப்படும் விசாகா நெறிமுறைகள் என்பதுதான் என்ன?

ராஜஸ்தானில் பன்வாரி தேவி என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெண்கள் இயக்கம் அங்கே வலுப்பெற ஆரம்பித்தது. 

இதைத் தொடர்ந்து பெண்ணுரிமை இயக்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாகா என்ற கூட்டு அமைப்பின் சார்பில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்தன. 

இந்த வழக்கின் அடிப்படையில் 1997இல் உச்ச நீதிமன்றம் பணியிடத்தில் பாலியல் தொல்லை என்றால் என்ன என்பதை வரையறுத்து, அதை எப்படிக் கையாளுவது என்பதற்கு நெறிமுறைகளையும் வகுத்து அளித்தது. 

அந்த நெறிமுறைகள் விசாகா நெறிமுறைகள் என்று அழைக்கப்படுகின்றன. அதன் முக்கிய அம்சங்கள்:

பணியிடத்தில் பாலின சமத்துவம் வழங்குவது என்பது, பெண்களுக்கு பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு அளிப்பதுடன், அரசியல் சாசனம் வழங்கியுள்ள கண்ணியத்துடன் வேலை செய்வதற்கான உரிமையையும் உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பான வேலைச்சூழல் என்பது பணிபுரியும் ஒரு பெண்ணின் அடிப்படை உரிமை.
பணியிடத்தில் ஆண் பணியாளர்களுடன் எந்த வகையிலும் பெண் பணியாளர்கள் ஒப்பிடப்பட்டு ஒடுக்கப்படக் கூடாது, எண்ணிக்கையும் குறைக்கப்படக் கூடாது. அப்படி ஒரு நிறுவனத்தில் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் (எ.கா. காவல்துறை, ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவு), அது முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இணக்கமற்ற பாலுணர்வு உள்நோக்கம் கொண்ட நடத்தை (நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ) பாலியல் தொல்லையாகவே கருதப்படும். அப்படியென்றால், எவையெல்லாம் பாலியல் தொல்லைகள்:
# உடலை தொடுதல், தொடுவதற்கு முன்வருதல்
# உடலுறவுக்கு இசைவு தெரிவிக்க வலியுறுத்துதல் அல்லது கோரிக்கை விடுத்தல்
# பாலியல் தன்மைகொண்ட குறிப்புகள்
# நீலப்படங்களை காட்டுதல்
# இவற்றைத் தவிர பாலியல் நோக்கம் கொண்ட இணக்கமற்ற உடல் தொடுகை, வார்த்தைகள் அல்லது மற்ற தொடர்புகள் எதுவாக இருந்தாலும்
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, எல்லா நிறுவனங்களும் இது தொடர்பாக புகார் குழு ஒன்றை பணியிடத்தில் உருவாக்க வேண்டும்.
அதன் தலைவராக பெண் இருக்க வேண்டும். அந்தக் குழுவில் குறைந்தபட்சம் பாதி உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும்.

                                         பாசிட்டிவ் பெண் கௌசல்யா

எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளுக்குத் (டிச. 1) தயாராகிக் கொண்டிருந்தார் கௌசல்யா பெரியசாமி. இந்தியாவின் முதல் பாசிட்டிவ் பெண்கள் அமைப்பை உருவாக்கிய அவர், தேசிய அளவில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்காக உத்தரப்பிரதேசத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
இந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளானதை முதன்முதலாக வெளிப்படையாக அறிவித்தவர்களில் ஒருவர் கௌசல்யா. திருமணம் மூலமே எச்.ஐ.வி. தொற்றைப் பெற்ற அவர், மற்ற இல்லத்தரசிகளும் தன்னைப் போல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே அப்படி அறிவித்தார். அப்போது முதல் இன்றுவரை பெண்களும் குழந்தைகளும் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கவும் போராடிக் கொண்டிருக்கிறார்.
"எச்.ஐ.வி. பாதிப்பு தொடர்பான ஒரு நிறுவனத்தில் ஆரம்பத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எச்.ஐ. விக்கான தேசிய திட்டம் வகுப்பதற்காக 1997இல் சென்னையில் நடைபெற்ற ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் அதிக எச்.ஐ.வி. நோயாளிகள் இருக்கும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நான், மறைந்த ஜோன்ஸ், வரலட்சுமி, ஹேமலதா ஆகியோர் பங்கேற்றோம். அந்தக் கூட்டத்தில் எச்.ஐ.வி. யாருக்கு வேண்டுமானாலும் வர லாம். பெண்களுக்கு விழிப்புணர்வை அதிக ரிக்க வேண்டும் என்றோம். ஆனால், நீங்கள் நிபுணர்களா என்று கேள்வி எழுப்பினார்கள்.
அமைப்பாக இல்லாததால்தான், நமது குரல் எடுபடவில்லை என்று புரிந்து கொண்டோம். தென்னிந்தியாவில் உள்ள 18 பெண்கள் சந்தித்துப் பேசி, 1999இல் ஒரு அமைப்பானோம். ஆசியாவிலேயே வெளிப்படையாக சங்கமாகப் பதிவு செய்த முதல் எச்.ஐ.வி பாசிட்டிவ் பெண்கள் அமைப்பு எங்களுடையதுதான்" என்று பி.டபிள்யு.என். தொடங்கிய கதையைச் சொல்கிறார் கௌசல்யா.
தற்போதும் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய எச்.ஐ.வி. பாசிட்டிவ் பெண்கள் அமைப்பு இதுதான். 13 மாநிலங்களில் 20,000க்கும் மேற்பட்டோர் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அத்துடன், தன்னார்வமாக உழைப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட பெண்களை சாதாரண வாழ்க்கைக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் பி.டபிள்யு.என். அமைப்பின் நோக்கம். இந்த அமைப்பு சார்பில் திருவண்ணாமலையில் கேண்டீன், திருநெல்வேலியில் 40 ஏக்கர் நிலத்தில் இயற்கை வேளாண்மை, விழுப்புரத்தில் வீ பிராண்ட் என்ற துணிக் கடை ஆகியவை நடத்தப் பட்டு வருகின்றன. 58க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்த அமைப்பு சாத்தியப்படுத்திய சில மாற்றங்கள்: தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் விதவையானவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் விதவை பென்ஷன் வழங்க வேண்டும் (முன்பு 45 வயதாக இருந்தது). எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மருந்து கொடுக்க வேண்டும் என்ற இவர்களது வலியுறுத்தலைத் தொடர்ந்தே, ஏ.ஆர்.வி. இலவசமாகத் தரப்பட்டு வருகிறது. நெவ்ரெபி என்ற மருந்துக்கு பேட்டன்ட் உரிமை கோரப்பட்டிருந்ததற்கு எதிராக, வழக்கு போட்டு போராடி உரிமம் பெற்றுள்ளார்கள்.
தற்போது தமிழக அரசின் எச்.ஐ.வி. ஆலோ சனைக் குழுவில் இவர்களுடைய அமைப்பும் ஒரு பிரதிநிதி. முன்பு குழந்தைகளுக்கான தேசிய எச்.ஐ.வி. ஆலோசனைக் குழுவில் கௌசல்யா பிரதிநிதியாக இருந்திருக்கிறார்.
"எல்லோருக்கும் எய்ட்ஸ் என்றால் என்னவென்று தெரியும், ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்பு எப்படிப்பட்டது, எவ்வளவு மோசமானது என்று தெரியாது. "எங்களுக்கெல்லாம் எச்.ஐ.வி. தொற்று வராது" என்ற மாயையே பலரிடம் அதிகம். "என் குடும்பம் நல்ல குடும்பம்" என்ற அலட்சியமும் இருக்கிறது. ஆனால், இதுவெல்லாமே பொய்.
இந்தியாவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட 20 லட்சம் பேரில், 40 சதவிகிதம் பேர் (8 லட்சம் பேர்) பெண்கள். இதில் 86 சதவிகிதம் பெண்களுக்கு திருமண உறவு காரணமாகவே எச்.ஐ.வி. தொற்றியுள்ளது. எனவே, எச்.ஐ.வி. பரவுவதற்கு இதுவே முக்கிய காரணம். பாலியல் தொழில், ரத்தம் மூலம் எச்.ஐ.வி. பரவியது வெறும் 14 சதவிகிதம்தான். ஆனால் "கே", லெஸ்பியன் போன்ற ஒரு பால் உறவு, திருநங்கைகளால்தான் எய்ட்ஸ் அதிகம் பரவுவதாக தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட பெண்களில் 60 முதல் 70 சதவிகிதம் பெண்கள் விதவையாக இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களும் இறந்து போனால், குழந்தைகள் ஆதரவற்றவர்களாகி விடுகின்றனர்.
இப்போது தமிழகத்தில் ஒவ்வொரு துறையின் கீழும் வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகைகளில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த உதவித்தொகையை வைத்துக்கொண்டு வாழ முடியாது. கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு ரூ.3,000மும், நகரத்தில் ரூ.5,000மும் அவசியம்.எனவே, அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழி செய்ய வேண்டும், குறிப்பாக பெண்களுக்கு.
தற்போது ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரிலும் மகாராஷ்டிராவில் நாக்பூரிலும் பாசிட்டிவ் பெண்களுக்கான அரசின் ஆதார மையத்தை ஏற்று நடத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கிறோம். இது போன்றதொரு மையம் தமிழகத்தில் அமைக்கப்பட்டால், நாமக்கல் மாவட்டத்துக்கு மட்டும் 4 மையங்கள் தேவை. ஏனென்றால், அங்கு 10,000 பெண் எச்.ஐ.வி. நோயாளிகள் இருக்கிறார்கள். இந்த மையங்கள் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் எச்.ஐ.வியை பரவச் செய்வதைத் தடுக்க முடியும். அவர்களுக்கு வேலைவாய்ப்பு தருவோம்.
எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்கள் வளரும்போது வாழ்க்கையை கையாள்வதற்கான கல்வியும், வளர்ந்தபின் வாழ்வதற்கு ஏற்ற சூழலும் மருந்தும் தேவை. தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்திலேயே இளைஞர்களுக்கான சிகிச்சை மையங்கள் இருக்கின்றன. எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சிகிச்சையும் உதவியும் பெறலாம். இது பற்றி பெரும்பாலோருக்குத் தெரியாது.
இதைத் தாண்டி பள்ளி, கல்லூரிகள், பொது மருத்துவமனைகளில் எச்.ஐ. வி. பாதிக்கப் பட்டவர்களை நடத்தும் முறை பெரிதாக மாறவில்லை. எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர் களைப் பற்றிய பொதுமக்களின் மனோபாவம் மாறவில்லை. எச்.ஐ.வியை அறிவியல்பூர்வமாக புரிந்துகொண்டால் இந்த மனோபாவத்தை மாற்றலாம். அப்போது எச்.ஐ.வி. பாதிப்பில் சிக்காமல் இருப்பதுடன், வேறு பிரச்சினைகளையும் தவிர்க்கலாம். அந்தப் புரிதல்தான் அவசியம்" என்கிறார் கௌசல்யா